பவழக்குடி சித்தர் குரு பூஜை விழா
திருக்கனுார் : சோம்பட்டு பவழக்குடி சித்தர் கோவிலில், குரு பூஜை விழா வரும் 23ம் தேதி நடக்கிறது.திருக்கனுார் அடுத்த சோம்பட்டு கிராமத்தில் பவழக்குடி சித்தர் ஜீவ சமாதி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், சித்தர் ஜீவ சமாதி அடைந்த 218ம் ஆண்டு குரு பூஜை விழா வரும் 23ம் தேதி நடக்கிறது.இதனையொட்டி, அன்று காலை 8:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரையில், யாக வேள்வியுடன் கூடிய அபிஷேக ஆராதனை, மகா தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை பவழக்குடி சித்தர் தொண்டு சபை மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.