| ADDED : மார் 18, 2024 03:21 AM
புதுச்சேரி, : அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத இறந்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பில், 65 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத நபர் நேற்று முன்தினம் சுயநினைவு இல்லாமல் கிடந்தார். அவரை அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார். அவர், யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என எந்த விபரமும் தெரியவில்லை.இதுகுறித்து, முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.