பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர் சந்திப்பு
புதுச்சேரி:புதுச்சேரி கிளை பாங்க் ஆப் இந்தியா என்.ஆர்.ஐ., (டைமண்ட் கஸ்டமர்) சந்திப்பு நிகழ்ச்சி ஓட்டல் ஆனந்தா இன்னில் நடந்தது.நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக லைய் பிரான்சிஸ் முதல்வர் எரிக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வங்கி சென்னை மண்டல மேலாளர் கோபாலகிருஷ்ணன் பங்கேற்று மாணவர்களுக்கு கல்விக் கடன்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உதவி பொதுமேலாளர் சிதம்பரகுமார், உதவி பொது மேலாளர் ஆனந்த ப÷ ட மற்றும் கிளை மேலாளர்கள், வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை புதுச்சேரி கிளை முதன்மை மேலாளர் மற்றும் வங்கி அலுவலர்கள் செய்திருந்தனர்.