உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இந்திரா நகர் தொகுதியில்பலத்த போலீஸ் பாதுகாப்பு

இந்திரா நகர் தொகுதியில்பலத்த போலீஸ் பாதுகாப்பு

புதுச்சேரி:இந்திரா நகர் தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுவதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்திராநகர் தொகுதி இடைத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு இன்று (13ம் தேதி) காலை 8 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழ்ச்செல்வன் (என்.ஆர்.காங்.,), பாஸ்கரன் (அ.தி.மு.க.,), ஆறுமுகம் (காங்.,) உள்ளிட்ட 7 பேர் போட்டியிடுகின்றனர்.வாக்காளர்கள் அச்சமின்றி ஓட்டளிக்கும் வகையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரண்டு கம்பெனி கொண்ட 168 மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், உள்ளூர் போலீசார் 435 பேர், 55 போலீஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.பதட்டமானவை என கண்டறியப்பட்ட 6 ஓட்டுச்சாவடிகள் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படுகின்றனர். அசம்பாவிதங்களைக் கட்டுப்படுத்த 2 மொபைல் போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.ஓட்டுச்சாவடிகள், மற்றும் 17ம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ள பாரதிதாசன் மகளிர் கல்லூரியை ஐ.ஜி., சர்மா, சீனியர் எஸ்.பி.,சந்திரன் உள்ளிட்ட உயரதிகாரிகள் நேரில் சென்று பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்