மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (19.09.2025) திருவள்ளூர்
19-Sep-2025
பாகூர் : பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று புரட்டாசி மாத பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி, காலை 9.00 மணிக்கு வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. மாலை 4:30 மணிக்கு பிரதோஷ வழிபாடு நடந்தது. இதில், கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வ நந்தி பெருமானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம் பன்னீர் உள்ளிட்டவற்றால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 6:00 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
19-Sep-2025