உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளிகளில் சைக்கிள் வழங்கல்

அரசு பள்ளிகளில் சைக்கிள் வழங்கல்

திருக்கனுார்: வாதானுார் அன்னை சாரதாதேவி அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட் வழங்கும் விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வீரய்யன் தலைமை தாங்கினார். ஆசிரியர் பாலகுமார் வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி மோகன், மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட் வழங்கினார். ஆசிரியை ரேணு நன்றி கூறினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் பார்வதி, செந்தமிழ்ச்செல்வி, குமுதா, பூவிழி, ஜார்ஜஸ் ஆகியோர் செய்திருந்தனர்.திருக்கனுார் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, தலைமை ஆசிரியை உஷா வரவேற்றார். முதன்மை கல்வி அதிகாரி மோகன் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு இலவச சைக்கிள் மற்றும் ரெயின் கோட் வழங்கினார். ஆசிரியர் அன்பரசன் தொகுத்து வழங்கினார்.ஆசிரியர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை