மேலும் செய்திகள்
கீரப்பாளையம் கோவிலில் 15ம் தேதி கும்பாபிேஷகம்
14-Sep-2024
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும், 15ம் தேதி நடக்கும் குறை தீர்ப்பு தினத்தில் பொதுமக்கள் பங்கேற்க, கலெக் டர் குலோத்துங்கன் அழைப்பு விடுத்துள்ளார்.அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்கு அனைத்து துறை அதிகாரிகள் முன்னிலையில், கலெக்டர் தலைமையில், ஒவ்வொரு மாதமும், 15ம் தேதி பொதுமக்கள் குறைதீர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது.அதன்படி இந்த மாதத்திற்கான பொதுமக்கள் குறை தீர்ப்பு தினம் வரும், 15ம் தேதி காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை, பேட்டையன் சத்திரம், வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
14-Sep-2024