உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி

 புதுச்சேரி நபரிடம் ரூ. 66 ஆயிரம் மோசடி

புதுச்சேரி: குறைந்த வட்டியில் லோன் பெற்று தருவதாக சண்முகாபுரத்தை சேர்ந்தவரிடம் ரூ. 66 ஆயிரத்தை மோசடி கும்பல் ஏமாற்றி உள்ளது. புதுச்சேரி, சண்முகாபுரத்தை சேர்ந்தவரை மொபைல் மூலம் தொடர்பு கொண்ட மர்மநபர், தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அறிமுகப்படுத்தி கொண்டு பேசியுள்ளார். அதில், குறைந்த வட்டியில் ரூ. 5 லட்சம் வரை லோன் பெற்று தருவதாக கூறியுள்ளார். இதைநம்பி, லோன் பெற விண்ணப்பித்தபோது, செயலாக்க கட்டணம் செலுத்தும்படி கூறியுள்ளார். இதையடுத்து, பல்வேறு தவணைகளாக மர்மநபருக்கு ரூ. 66 ஆயிரத்து 200 செலுத்தியுள்ளார். ஆனால், அதன்பின் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதேபோல், வம்பா கீரப்பாளையத்தை சேர்ந்தவர் 12 ஆயிரம் என 2 பேர் மோசடி கும்பலிடம் 78 ஆயிரத்து 200 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி