உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்க புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு

ட்ரோன் மூலம் கொசு மருந்து அடிக்க புதுச்சேரி நகராட்சி ஏற்பாடு

நாளை முதல் ட்ரோன் மூலம் கொசு ஒழிப்பு பணியை புதுச்சேரி நகராட்சி துவங்குகிறது.புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொசு அதிகரிப்பால் மக்கள் இரவு நேரங்களில் துாக்கமின்றி கடும் அவதி அடைந்து வந்தனர். அதையொட்டி புதுச்சேரி நகராட்சி கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த தீவிரமாக களம் இறங்கியது. புதுச்சேரி நகராட்சியில் மொத்தமுள்ள 42 வார்டுகளுக்கு கொசு மருந்து தெளிப்பான் மிஷின்கள் 30, புகை மருந்து அடிக்கும் 5 மிஷின்கள் புதிதாக வாங்கப்பட்டு, நகராட்சி ஊழியர்களுடன், மகளிர் சுய உதவி குழுக்கள் பெண்கள் கொசு மருந்து அடிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.இந்நிலையில், முத்தியால்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை, உப்பளம், முதலியார் பேட்டை ஆகிய ஐந்து தொகுதிகளில் செல்லும் பிரதான பெரிய வாய்க்கால்களில் மட்டும் வாடகை 'ட்ரோன்' மூலம் கொசு மருந்து அடிக்கும் பணியை நாளை முதல் புதுச்சேரி நகராட்சி துவங்குகிறது.இதற்காக விவசாய நிலங்களில் பூச்சி மருந்து அடிக்கும் ட்ரோனை புதுச்சேரி நகராட்சி வாடகைக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த ட்ரோனில் 20 நிமிடத்தில் ஒரு ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்க முடியும். ஒரு நாளைக்கு மொத்தமாக 15 ஏக்கர் அளவிற்கு மருந்து அடிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் இரண்டு நாட்களில் ஐந்து தொகுதிகளிலும் உள்ள பெரிய வாய்க்காலில் மருந்து அடித்து விடலாம் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ