உலக அளவிலான பென்காக் சிலாட் போட்டி புதுச்சேரி வீரர்கள் அபுதாபி பயணம்
பாகூர்: உலக அளவிலான பென்காக் சிலாட் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய அணி சார்பில் பங்கேற்கும், புதுச்சேரி வீரர்கள், அபுதாபி நாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.உலக அளவிலான 5வது ஜூனியர் பென்காக் சிலாட் போட்டி, நாளை (18ம் தேதி) துவங்கி வரும் 22ம் தேதி வரை, அபுதாபி நாட்டில் நடக்கவுள்ளது.இதில், ஜூனியர் பிரிவில் இந்திய அணி சார்பில் புதுச்சேரி வீரர்கள் பாலபிரசாத், சுர்ஜித், அறிவுமதி, அனுகிரகா, செஞ்சோலை, ஓவியா, செம்மதி, ஸ்ரீஹரிணி, சப் ஜூனியர் பிரிவில் செந்நிலா ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.மேலும், இவர்களுடன், இந்திய பென்காக் சிலாட் கூட்டமைப்பின் சார்பில், இந்திய அணியின் மேலாளராக புதுச்சேரியை சேர்ந்த அருள்ஜோதி பங்கேற்ற உள்ளார்.இவர்களை வாழ்த்தி வழினுப்பும் நிகழ்ச்சி உப்பளம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று அபுதாபி நாட்டிற்கு புறப்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை வாழ்த்தி வழியினுப்பி வைத்தார். புதுச்சேரி அமெச்சூர் பென்காக் சிலாட் அசோசியேஷன் தலைவர் சாந்தி லட்சுமி, பொதுச் செயலாளர் பச்சையப்பன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.