மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
17 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
17 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
17 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
17 hour(s) ago
புதுச்சேரி : லாஸ்பேட்டையில், ராதா மாதவ கல்யாண மகோத்சவ நிகழ்ச்சி இன்று துவங்குகிறது.புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதியானது, மார்கழி அதிகாலை நடத்திய பஜனையின் நிறைவான, 'நாம சங்கீர்த்தனம் நாட்டியம்' நடந்தது. இதில், விவேகானந்தா பள்ளி, மாதா அமிர்தானந்தமயி பள்ளி, இ.சி.ஆர் சங்கர சங்கரவித்யாலயா பள்ளி, காந்தி வீதி சங்கரவித்யாலயா பள்ளி மற்றும் வாசவி பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன் தொடர்ச்சியாக இன்று காலை 8:30 முதல் இரவு 9:00 மணி வரை லாஸ்பேட்டை, இ.சி.ஆர் சாலை, விவேகானந்தா மேல்நிலைப்பள்ளியில், சிவதாஸ் பாகவதர் தலைமையில் அஷ்டபதி பஜனை மற்றும் நாம சங்கீர்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கின்றன.இதையடுத்து, நாளை காலை 7:30 மணிக்கு உடையாளூர் கல்யாணராம பாகவதர் நிகழ்த்தும் உஞ்சவ்ருத்தி, 9:00 மணிக்கு ராதா மாதவ கல்யாண மகோற்சவம், 11:30 மணிக்கு மாங்கல்யதாரம், ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago