உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கான்ஸ்டபிள் எழுத்து தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை

 கான்ஸ்டபிள் எழுத்து தேர்வு தேதியை மாற்ற கோரிக்கை

புதுச்சேரி: போலீஸ் கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான எழுத்து தேர்வை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி யூனியன் பிரதேச பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வர்டு சார்லஸ் அறிக்கை; புதுச்சேரி காவல் துறையில் காலியாக உள்ள போலீஸ் கான்ஸ்டபிள் பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் 8ம் தேதி நடைபெறும் என, தலைமை செயலகம் அறிவித்துள்ளது. அதே தேதியில் மத்திய ஆசிரியர் தகுதி் தேர்வுக்கான நுழைவுத் தேர்வு நடக்கிறது. இதனால் இரண்டு தேர்வுக்கும் விண்ணப்பித்தவர்கள் இரண்டு தேர்வையும் ஒரே நாளில் எழுத முடியாத சுழல் ஏற்பட்டுள்ளது. ஆகையால், இளைஞர்களின் நலனை கருதி போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வுக்கான தேதியை வேறு தேதிக்கு மாற்றி அமைக்க கவர்னர், முதல்வர் மற்றும் உள்துறை அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை