ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை
புதுச்சேரி: சுகாதார ஊழியர்கள், கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய மா.கம்யூ., கோரிக்கை வைத்துள்ளது . மா.கம்யூ., மாநில ஒருங்கிணைப்பாளர் பெருமாள் அறிக்கை; புதுச்சேரியில் சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் கல்வித்துறையில் பணிபுரியும் ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி தொடர்ந்து போராடி வருகின்றனர். ஆனால், மாநில அரசு நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தி வருகிறது. இது, மக்களாட்சிக்கு அழகல்ல. ஊழியர்களை வஞ்சிக்காமல், சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும். சட்டசபையில் அறிவித்த படி, ஒப் பந்த ஊழியர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.