உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ரூ. 17 லட்சத்தில் ஆழ்துளை கிணறு

ரூ. 17 லட்சத்தில் ஆழ்துளை கிணறு

அரியாங்குப்பம்: வீராம்பட்டினத்தில் ரூ. 17 லட்சம் மதிப்பில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி துவக்கப்பட்டது. அரியாங்குப்பம் தொகுதி வீராம்பட்டினம் நாகூரார் தோட்டம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நிலவியதை தொடர்ந்து இதுபற்றி, அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.,விடம் கோரிக்கை வைத்தனர். அதற்கான ரூ. 17 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணியை நேற்று பாஸ்கர் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் வீரசெல்வம், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், பொது சுகாதாரக் கோட்ட பொறியாளர் உமாபதி, கிராம குடிநீர் திட்ட உதவிப் பொறியாளர் பீனாராணி, இளநிலைப் பொறியாளர் சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை