சத சண்டி ேஹாமம் கவர்னர் பங்கேற்பு
புதுச்சேரி : புதுச்சேரியில் நடந்த, சத சண்டி மஹா ேஹாமத்தில், கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்றார். புதுச்சேரி, தர்ம சம்ரக்ஷன சமிதி சார்பில், சாரதா நவராத்திரியை முன்னிட்டு, லாஸ்பேட்டை சங்கர வித்யாலயா மேல் நிலைப்பள்ளி வளாகத்தில், சத சண்டி மஹா ேஹாமம் கடந்த 3ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.நேற்று 6,வது நாள் யாக பூஜையில், கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டார். தொடர்ந்து கோ பூஜை துவங்கி மஹா பூர்ணாஹுதி வரை சிறப்பு பூஜைகள் நடந்தது.மாலையில், அம்ருதா வித்யாலயா மாணவ-மாணவியரின் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.