பள்ளிகள் நாளை இயங்கும்
புதுச்சேரி: பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு; புதுச்சேரியில் உள்ள அரசு, நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கடந்த 3ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனை ஈடு செய்யும் வகையில் நாளை 25ம் தேதி அனைத்து பள்ளிகளும் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வழக்கம் போல், வெள்ளிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.