உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்

புதுச்சேரி : மனநலம் பாதிக்கப்பட்ட மகனை காணவில்லை என தாய் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.சேதாரப்பட்டு நாகத்தம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் மதுரம்பாள். இவரது மகன் சுகுமார், 45; மனநலம் பாதித்தவர்.ஜிப்மரில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 6ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற சுகுமார் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மதுரம்பாள் கொடுத்த புகாரின் பேரில், சேதாரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ