உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  மகன் மாயம் :தாய் புகார்

 மகன் மாயம் :தாய் புகார்

அரியாங்குப்பம்: மகனை காணவில்லை என, தாய் போலீசில் புகார் செய்துள்ளார். வீராம்பட்டினத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் அரிநாதன், 14. இவர், 8ம் வகுப்பு படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த 25ம் தேதி, வீட்டில் இருந்து வெளியில் சென்றவர், இதுவரை வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் வீடு உள்ளிட்ட பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் ராஜேஸ்வரி புகாரின் பேரில், அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை