உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாய்க்கால் துார்வாரும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

 வாய்க்கால் துார்வாரும் பணி சபாநாயகர் துவக்கி வைப்பு

அரியாங்குப்பம்: மணவெளி தொகுதியில்,ரூ.11.67 லட்சம் மதிப்பில் துார்வாரும் பணியை, சபாநாயகர் செல்வம் துவக்கி வைத்தார். மணவெளி தொகுதி, டி.என்., பாளையத்தில், நுாறு நாட்கள் வேலை திட்டத்தின் கீழ், 11.67 லட்சம் ரூபாய் மதிப்பில், பள்ள மதகு வாய்க்கால் துார் வாரும் பணியை சபாநாயகர் செல்வம் நேற்று துவக்கி வைத்தார். தொடர்ந்து, அதேப் பகுதியில் உள்ள மேட்டு மதகு மற்றும் துாக்கு பாலம் ஏறி வாய்க்கால் துார் வாரும் பணியை, சபாநாயகர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அதிகாரி சவுந்தரி, உதவிப்பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் சிவப்பிரகாசம் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை