உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாப்ட்வேர் கம்பெனியில் திடீர் தீவிபத்து

சாப்ட்வேர் கம்பெனியில் திடீர் தீவிபத்து

புதுச்சேரி : சாப்ட்வேர் கம்பெனியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரி, காமராஜர் சாலை, பழைய சாரம் கலெக்டர் அலுவலகம் அருகில், மூன்றாவது மாடியில் ஏ 2 சாப்ட்வேர் கம்பெனி இயங்கி வருகிறது. இந்த கம்பெனி, நேற்று மாலை 5:45 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த புதுச்சேரி தீயணைப்பு அதிகாரி மனோகர் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று, தீயை அணைத்தனர். தீவிபத்தில் கம்பெனியில் இருந்த கம்ப்யூட்டர் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை