| ADDED : செப் 05, 2026 08:42 PM
புதுச்சேரி: புதுச்சேரி ராமகிருஷ்ண வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி ரோட்டரி சங்கம் மிட்டவுன் மற்றும் பள்ளி சார்பில், நடந்த விழாவில், மாணவர் விஜயசங்கர் வரவேற்றார். ராமகிருஷ்ண மடத்தின் பொறுப்பாளர் நித்யேஷ்நந்தா தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக கல்வித்துறையில் ஓய்வுபெற்ற பள்ளி துணை ஆய்வாளர் மல்லிகா, ரோட்டரி சங்க மிட்டவுன் செயலாளர் தமிழ்செங்கோலன் பங்கேற்று சிறப்புரையாற்றினர். பள்ளி தாளார் கணேசன் வாழ்த்துரை வழங்கினார். தொடர்ந்து, ஆசிரியர்களை கவுரவித்து, ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. மாணவர் ரோஹித் நன்றி கூறினார்.