உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மூச்சு திணறல் ஏற்பட்டு டிரைவர் சாவு

மூச்சு திணறல் ஏற்பட்டு டிரைவர் சாவு

வில்லியனுார் : வில்லியனுார் அருகே மூச்சு திணறல் ஏற்பட்டு டிரைவர் உயிரிழந்தார்.வில்லியனுார் அடுத்த பொறையூர், களத்துமேடு தெருவை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் நாகராஜ், 30; மினி லோடு கேரியர் டிரைவர். திருமணமாகாத இவருக்கு குடி பழக்கம் உள்ளது.கடந்த 2 நாட்களாக வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சாப்பிடாமல் இருந்தார். நேற்று அதிகாலை அவருக்கு உடல்நிலை மோசமாகி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. அவரை, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதித்து அவர், இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை