தினமலர் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி; புதுச்சேரியில் வரும் 12ம் தேதி நடக்கிறது
புதுச்சேரி : 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான 'பட்டம் இதழ்' மற்றும் கோர்காடு தி ஸ்காலர் பள்ளி, ஓம்சக்தி மாறன் இன்பரா புராஜெக்ட் இணைந்து நடத்தும், 'அரிச்சுவடி ஆரம்பம்' எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி வரும் 12ம் தேதி புதுச்சேரியில் நடக்கிறது.புதுச்சேரி மறைமலையடிகள் சாலை, வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை, லட்சுமி பெட்ரோல் பங்க் பின்புறம் உள்ள என்.எஸ். போஸ் மகாலில் வரும் 12ம் தேதி காலை 7.00 முதல் 9:30 மணி வரை நடைபெற உள்ள நிகழ்ச்சியில், 2.5 மற்றும் 3.5 வயதுள்ள மழலைகளின் விரல் பிடித்து கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பிரபலங்கள் 'அ -ஆ' எழுதி பழக்க உள்ளனர்.நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம். ஆனால் முன் பதிவு செய்த குழந்தைகள் மட்டுமே பங்கேற்க முடியும். பங்கேற்கும் அனைத்து குழந்தைகளுக்கும், 'ஸ்கூல் கிட்' பரிசாக வழங்கப்படும்.விஜயதசமி திருநாள் கல்வியை கற்கும் வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். இந்நாளில் உங்கள் வீட்டு இளந்தளிர்களின் பிஞ்சு விரல் பிடித்து அரிச்சுவடியை ஆரம்பித்து வைக்க கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றார்கள்.நிகழ்ச்சியில் பங்கேற்க, 95973 26264, 78714 79674 ஆகிய மொபைல் போன் எண்களில் காலை 9:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.கல்வி கோவிலுக்கு அடியெடுத்து வைக்க உங்க செல்ல குட்டீஸ்களை காலை 7:00 மணிக்குள், விழா அரங் கிற்கு அழைத்து வாருங்கள்.