குருமாம்பேட் பகுதியில் நாளை குடிநீ கட்
புதுச்சேரி: குருமாம்பேட் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் பராமரிப்பு பணியால், நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.குடிநீர் தொட்டி பராமரிப்பு பணியால், நாளை 19ம் தேதி, காலை 10:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, குருமாம்பேட் ஹவுசிங் போர்டு காலனி, ஐயங்குட்டிபாளையம், ராகவேந்திரா நகர், சிவசக்தி நகர், சுபாஷ் சந்திரபோஸ் நகர், குருமாம்பேட் வில்லேஜ் ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.இவ்வாறு பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.