உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / ப்ரீமியம் /  விஜய் பொதுக்கூட்ட திடலில் த.வெ.க.,வினர் துாய்மை பணி

 விஜய் பொதுக்கூட்ட திடலில் த.வெ.க.,வினர் துாய்மை பணி

புதுச்சேரி: உப்பளம் துறைமுக மைதானத்தில் விஜய் பொதுக்கூட்டம் முடிந்ததும், த.வெ.க.,வினர் துப்புரவு பணி மேற்கொண்டனர். த.வெ.க., தலைவர் விஜய் நேற்று புதுச்சேரி உப்பளம் துறைமுக மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அவரை பார்க்க 5 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு கட்சி சார்பில், பிஸ்கட், ஸ்நாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் தரப்பட்டது. பொதுக்கூட்டத்திற்கு வந்த தொண்டர்கள்,தண்ணீரை குடித்து விட்டு பாட்டில்களை அங்கேயே வீசி சென்றதால், மைதானம் அலங்கோலமாக காணப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கூட்டம் முடிந்து தொண்டர்கள் கலைந்து சென்றதும், கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த நிர்வாகிகள், கட்சியின் தன்னார்வளர்களுடன் இணைந்து, மைதானத்தில் கிடந்த பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் குப்பைகளை அகற்றி, சுத்தம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Sun
டிச 10, 2025 09:44

ம்ஹீம். கூட்டம் முடிந்தவுடன் திடலை சுத்தம் செய்து பழைய நிலைக்கு தர வேண்டும் என புதுச்சேரி போலீசார் ஏற்கெனவே நிபந்தனை விதித்து இருப்பார்கள்! இதே போல் நிபந்தனை தமிழ்நாட்டிலும் விதிக்கப் பட வேண்டும்.


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை