மேலும் செய்திகள்
இறந்தவர் யார் போலீஸ் விசாரணை
26-Jan-2026
பாகூர்: கிருமாம்பாக்கம் அடுத்த நரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெகதீசன், 29 ;மீனவர். இவர் கன்னியக்கோவிலில் மீன் கடை நடத்தி வருகிறார். சில நாட்களாக மீன்கள் சீசன் இல்லாததால் கடையை திறக்காமல் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் ஜெகதீசன், கடையை திறந்து சுத்தம் செய்தார். அப்போது கடையின் பின்புறத்தில் துர்நாற்றம் வீசியது. பின்னால் சென்று பார்த்தபோது , அடையாளம் தெரியாத நபர் அழுகிய நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிந்து, இறந்த நபர் யார், அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
26-Jan-2026