உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவி மாயம் கணவர் புகார்

மனைவி மாயம் கணவர் புகார்

புதுச்சேரி: புதுச்சேரியில் மனைவியை காணவில்லை என கணவர் போலீசில் புகார் செய்துள்ளார். லாஸ்பேட்டை சாந்தி நகர், தேசிக விநாயகம் பிள்ளை வீதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். கட்டட தொழிலாளி. இவரது மனைவி சுந்தரி, 37; இரு மகன்கள் உள்ளனர். சுந்தரி லாஸ்பேட்டையில் உள்ள தனியார் டிப்பார்ட்மென்டல் ஸ்டோரில் வேலை செய்து வந்தார்.கடந்த 14ம் தேதி வேலைக்கு சென்ற சுந்தரி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், பாலமுருகன் லாஸ்பேட்டை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை