மனைவி மாயம் கணவர் புகார்
புதுச்சேரி: ரெட்டியார்பாளயைம் அருகே உள்ள ஜி.என்.,பாளையத்தை சேர்ந்தவர் கோவிந்தன், 29, இவரது மனைவி சந்தியா, 25, கணவன் மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் தனது, இரண்டரை வயது பெண் குழந்தையுடன், வீட்டில் வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து, அவர் கோவிந்தன் கொடுத்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.