தார் சாலை அமைக்கப்படுமா
புதுச்சேரி : சுதந்திர பொன்விழா நகர் குடியிருப்போர் நல்வாழ்வு சங்க அறிக்கை: புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகர் பகுதியில் அமைந்து சாலை சேதமடைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். நகரில் உள்ள மின்விளக்குகள் எரியாமல் உள்ளது. ஆகையால், அரசு உடனடியாக சுதந்திர பொன்விழா நகரில் தார் சாலை அமைத்துத்தரவும், தெரு மின்விளக்குகளை சீரமைக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.