மேலும் செய்திகள்
குடும்ப பிரச்னையில் பெயிண்டர் தற்கொலை
19-Jan-2025
புதுச்சேரி; சாரம், சக்தி நகர் 5வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன், 55; ஆசாரி. இவரது மனைவி ஜெயலட்சுமி, 47; கடந்த 2ம் தேதி ஏற்பட்ட குளிர் காய்ச்சல் காரணமாக, உடல்நிலை பாதிக்கப்பட்டு, முத்தியால்பேட்டையில் உள்ள தனியார் கிளினிக்கில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், வீட்டில் இருந்த ஜெயலட்சுமிக்கு நேற்று முன்தினம் மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். உடனே அவரை, குடும்பத்தார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.அங்கு, அவரை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார்.இதுகுறித்து நாகராஜன் அளித்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
19-Jan-2025