உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / 10 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஏனாம், மாகே, புதுச்சேரி அணிகள் வெற்றி

10 ஓவர் கிரிக்கெட் தொடரில் ஏனாம், மாகே, புதுச்சேரி அணிகள் வெற்றி

புதுச்சேரி: 10 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டங்களில் ஏனாம், மாகே, புதுச்சேரி வடக்கு அணிகள் வெற்றி பெற்றன. கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம் நிறுவனம் சார்பில் 40 வயதிற்கு மேற்பட்டோருக்கான 10 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் கடந்த 7ம் தேதி துவங்கி சி.ஏ.பி., மைதானம் 4ல் நடந்து வருகிறது.புதுச்சேரி வடக்கு, தெற்கு, மேற்கு, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய 6 அணிகள் பங்கு பெறுகின்றன. புதுச்சேரியின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று ஆடி வருகின்றனர் . நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கிய போட்டியில் காரைக்கால்- ஏனாம் அணிகள் மோதின. முதலில் ஆடிய காரைக்கால் அணி 10 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 97 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, ஆடிய ஏனாம் அணி 9.3 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 99 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 விக்கெட் விழ்த்திய ஏனாம் அணியின் சுமன் பாபு ஆட்டநாயகன் விருது பெற்றார். மதியம் 12:30 மணிக்கு துவங்கிய போட்டியில் புதுச்சேரி தெற்கு- மாகே அணிகள் ஆடின. முதலில் ஆடிய மாகே அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 146 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய புதுச்சேரி தெற்கு அணி 10 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 88 ரன்கள் மட்டுமே எடுத்தது. மாகே அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 32 பந்துகளில் 83 ரன்கள் அடித்த மாகே அணியின் விஜின் அசெம்பட்ச் ஆட்டநாயகன் விருதை வென்றார். மதியம் 3:00 மணிக்கு நடந்த போட்டியில் புதுச்சேரி மேற்கு- வடக்கு அணிகள் மோதின. முதலில் ஆடிய வடக்கு அணி 10 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 91 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து, ஆடிய மேற்கு அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 52 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் இருந்தபோது, வடக்கு அணியின் பவுலர் முரளியின் அபார பந்து வீச்சால் 10 ஓவர்களில் 74 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. வடக்கு அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5 விக்கெட் விழ்த்திய வடக்கு அணியின் முரளி ஆட்டநாயகன் விருது வென்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ