உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பொது இடத்தில் ரகளை வாலிபர் கைது 

பொது இடத்தில் ரகளை வாலிபர் கைது 

பாகூர்: பொது இடத்தில் ரகளை யில் ஈடுபட்ட கள்ளக்குறிச்சி வாலிபர் மீது போலீ சார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாகூர் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, சோரியாங்குப்பம் வி.ஐ.பி., நகர் சந்திப்பில், வாலிபர் ஒருவர் குடி போதையில், பொதுமக்களை பார்த்து ஆபாசமாக திட்டிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார். போலீசார் அவரிடம் ந டத்திய விசாரணையில்'' கள்ளக்குறிச்சி மாவட்டம் அகரகோட்டலம் கிராமத்தை சேர்ந்த சின்னப்ப ராஜ் 32; என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை