மேலும் செய்திகள்
போதை வாலிபர் கைது
04-Feb-2026
அரியாங்குப்பம்: பொது இடத்தில், அவதுாறாக பேசிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். தவளக்குப்பம் - தானாம்பாளையம் சாலையில், வாலிபர் அவ்வழியாக செல்பவர்களை அவதுாறாக பேசுவதாக தவளக்குப்பம் போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. அதையடுத்து, அங்கு சென்ற போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். பெரியக்காட்டுப்பாளையம் சிவனார்புரத்தை சேர்ந்த ஹரிதாஸ், 24; என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.
04-Feb-2026