உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

 கத்தியை காட்டி மிரட்டிய வாலிபர் கைது

புதுச்சேரி: கத்தியை காட்டி, பொதுமக்களை மிரட்டிய வாலிபரை, போலீசார் கைது செய்தனர். ரெட்டியார்பாளையம் சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது சாலைத்தெருவில், கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதையடுத்து, போலீசார் அங்கு நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் உழவர்கரை, சாலைத் தெருவை சேர்ந்த அன்பரசு, 21; என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், கத்தியை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை