உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை

புதுச்சேரி: திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். ஜீவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் புருேஷாத்தமன் மகன் தர்மதுரை, 26; கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி குழந்தை உள்ள 38 வயது பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அதை அவரது தாய் கண்டித்துள்ளார். அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தர்மதுரை வற்புறுத்தினார். அதற்கு அப்பெண் மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த தர்மதுரை நேற்று முன்தினம் அப்பெண்ணின் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி