உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மீண்டும் அப்பா ஆன கோலி

மீண்டும் அப்பா ஆன கோலி

புதுடில்லி: கோலி-அனுஷ்கா தம்பதிக்கு மகன் பிறந்துள்ளார்.இந்திய அணி 'சீனியர்' வீரர் கோலி 35. தற்போது நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரு டெஸ்டில் இருந்து விலகினார். இவரது மனைவி அனுஷ்காவுக்கு மீண்டும் குழந்தை பிறக்கப் போகிறது, கோலி அம்மாவுக்கு உடல்நலமில்லை, சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார் என பல்வேறு தகவல் வெளியாகின. இதனிடையே மீதமுள்ள 3 டெஸ்டிலும் கோலி விலகினார். தற்போது கோலி-அனுஷ்கா தம்பதிக்கு கடந்த பிப். 15ல் மகன் 'அக்காய்' பிறந்துள்ளது தெரியவந்துள்ளது. ஏற்கனவே இவர்களுக்கு மகள் வாமிகா 3, உள்ளார். இதுகுறித்து அனுஷ்கா வெளியிட்ட செய்தி:மகிழ்ச்சி, அன்பால் நிறைந்த இருதயத்தால், வாமிகாவின் சிறிய சகோதரன், எங்களது ஆண் குழந்தை 'அக்காயை' இந்த உலகிற்கு வரவேற்றோம், என்பதை இந்த உலகத்திற்கு தெரிவித்துக் கொள்கிறோம்,'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி