உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கால்பந்து / கால்பந்து: இந்தியா திரில் வெற்றி * வீழ்ந்தது பூடான்

கால்பந்து: இந்தியா திரில் வெற்றி * வீழ்ந்தது பூடான்

லலித்புர்: தெற்காசிய கால்பந்து (20 வயது) லீக் போட்டியில் 9 வீரர்களுடன் விளையாடிய இந்தியா, 1-0 என பூடானை வென்றது.தெற்காசிய கால்பந்து (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 6வது சீசன் நேபாளத்தில் நடக்கிறது. 6 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன. இந்திய அணி 'பி' பிரிவில் பூடான், மாலத்தீவுடன் இடம் பெற்றுள்ளது. நேற்று தனது முதல் போட்டியில் இந்திய அணி, பூடானை எதிர்கொண்டது. போட்டியின் 37 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'கார்னர் கிக்' கிடைத்தது. இதில் கெல்வின் அடித்த பந்தை பெற்ற மோனிருல் மொல்லா, தலையால் முட்டி கோல் அடித்தார். இந்திய அணி முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்றது. போட்டியின் 69 வது நிமிடத்தில் இந்தியாவின் பிரம்வீர், பூடானின் கின்லே இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவருக்கும் 'ரெட் கார்டு' காட்டப்பட்டது. தவிர, மற்றொரு இந்திய வீரர் வன்லால்பெகேயும் ('ரெட் கார்டு') வெளியேற்றப்பட்டார்.இதையடுத்து மீதம் இருந்த 21 நிமிடம் இந்திய அணி 9 வீரர்களுடன் விளையாட நேரிட்டது. இருப்பினும் பூடான் சவாலை சமாளித்த இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் 'திரில்' வெற்றி பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை