உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / பிளே-ஆப் சுற்றில் டில்லி: புரோ கபடியில் முன்னேற்றம்

பிளே-ஆப் சுற்றில் டில்லி: புரோ கபடியில் முன்னேற்றம்

புனே: புரோ கபடி லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு டில்லி அணி முன்னேறியது. லீக் போட்டியில் 47-25 என பெங்கால் அணியை வீழ்த்தியது.இந்தியாவில், புரோ கபடி லீக் 11வது சீசன் நடக்கிறது. புனேயில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், டில்லி அணிகள் மோதின. பெங்கால் அணியினரை ஒரு முறை 'ஆல்-அவுட்' செய்த டில்லி அணி, முதல் பாதி முடிவில் 26-9 என முன்னிலை பெற்றிருந்தது. இரண்டாவது பாதியில் மீண்டும் அசத்திய டில்லி அணிக்கு 21 புள்ளி கிடைத்தது. பெங்கால் அணி 16 புள்ளி மட்டும் பெற்றது.ஆட்டநேர முடிவில் டில்லி அணி 47-25 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. டில்லி அணிக்கு கேப்டன் அஷு மாலிக் (17 புள்ளி), யோகேஷ் (9), ஆஷிஸ் (5) கைகொடுத்தனர். பெங்கால் சார்பில் விஷ்வாஸ் 8, நிதேஷ் குமார் 5 புள்ளி பெற்றனர்.இதுவரை விளையாடிய 20 போட்டியில், 11 வெற்றி, 4 'டை', 5 தோல்வி என 71 புள்ளிகளுடன் 2வது இடத்துக்கு முன்னேறிய டில்லி அணி 'பிளே-ஆப்' சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது. ஏற்கனவே ஹரியானா அணி (78 புள்ளி) 'பிளே-ஆப்' சுற்றுக்குள் நுழைந்தது. பெங்கால் அணி 40 புள்ளிகளுடன் (5 வெற்றி, 3 'டை', 11 தோல்வி) 10வது இடத்தில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ