உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / சரத் கமலுக்கு ஒலிம்பிக் கவுரவம்

சரத் கமலுக்கு ஒலிம்பிக் கவுரவம்

புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மூவர்ணக் கொடியை சரத் கமல் ஏந்தி வர உள்ளார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வரும் ஜூலை 26 முதல் ஆக. 11 வரை 33வது ஒலிம்பிக் போட்டி நடக்கவுள்ளது. இதன் துவக்க விழாவில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி வரும் கவுரவம் தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் அஜந்தா சரத் கமலுக்கு வழங்கப்பட்டுள்ளது. மூவர்ணக் கொடி ஏந்தி வரும் இந்திய வீராங்கனை இன்னும் அறிவிக்கப்படவில்லை.பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய குழுவுக்கு தலைவராக ஆறு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் நியமிக்கப்பட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை