உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / டென்னிஸ் / ஐ.டி.எப்., டென்னிஸ்: வைதேகி சாம்பியன்

ஐ.டி.எப்., டென்னிஸ்: வைதேகி சாம்பியன்

சோலாபுர்: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையரில் இந்திய வீராங்கனை வைதேகி சவுத்ரி சாம்பியன் பட்டம் வென்றார்.மகாராஷ்டிராவின் சோலாபுர் நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் வைதேசி சவுத்ரி 25, ஜப்பானின் மிச்சிகா ஒஜெகி மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த வைதேகி, பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டிலும் மீண்டும் அசத்திய இவர் 6-4 என வென்றார்.முடிவில் வைதேகி 3-6, 6-3, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று கோப்பை வென்றார். இது, வைதேகி கைப்பற்றிய 4வது ஐ.டி.எப்., ஒற்றையர் பட்டம்.இரட்டையரில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, வைஷ்ணவி அத்கர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை