மணிஷ், வைஷ்ணவி சாம்பியன் * தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில்
புதுடில்லி: டில்லியில் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பைனலில் தமிழக வீரர்கள் மணிஷ் சுரேஷ்குமார், கீர்த்திவாசன் சுரேஷ் மோதினர். முதல் செட்டை 6-4 என வென்ற மணிஷ், அடுத்த செட்டை 6-2 என வசப்படுத்தினார். முடிவில் மணிஷ் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.பெண்கள் ஒற்றையர் பைனலில் மஹாராஷ்டிராவின் வைஷ்ணவி, சம வீராங்கனை ஆகான்ஷாவை எதிர்கொண்டார். இதில் வைஷ்ணவி 6-1, 6-2 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்று, கோப்பை வென்றார்.ஆண்கள் இரட்டையர் பைனலில் நிதின் குமார், மான் கேஷர்வானி ஜோடி, 6-4, 3-6, 10-5 என மணிஷ் சுரேஷ்குமார், அபினவ் ஜோடியை வென்று சாம்பியன் ஆனது.பெண்கள் இரட்டையரில் ஆகான்ஷா, சோஹா ஜோடி 6-2, 6-2 என பூஜா, யுபராணி ஜோடியை சாய்த்து கோப்பை வென்றது.