மேலும் செய்திகள்
கந்து வட்டி: ஆசிரியை தற்கொலை
12-Sep-2025
பஸ் மீது கார் மோதி இருவர் உயிரிழப்பு
03-Sep-2025
அரியலுாரில் போலி டாக்டர் சிக்கினார்
31-Aug-2025
உடையார்பாளையம்: உடையார்பாளையம் அருகே நிலத்தகராறில் கணவன், மனைவி உட்பட மூவரை அரிவாளால் வெட்டிய இரண்டு பேரை போலீஸார் கைதுசெய்தனர்.உடையார்பாளையம் அருகே உள்ள ஒக்கனத்தம் பஞ்சாயத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (45). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இளமாரனுக்கும் நிலப்பிரச்னை, பணம் கொடுக்கல், வாங்கல் இருந்து வந்துள்ளது.இந்நிலையில், இளமாறன் (46), இவரது உறவினர்களான சிவசுப்பிரமணியன், கோவிந்தராஜ் (62) ஆகியோர் சேர்ந்து இளங்கோவன், அவரது மனைவி வளர்மதி (40), மகள் காந்திமதி (22) ஆகியோரை அரிவாளால் வெட்டினர்.காயமடைந்த காந்திமதி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இளங்கோவன், வளர்மதி ஆகியோர் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுகுறித்து வந்தபுகாரின் பேரில், உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கென்னடி வழக்குப்பதிவு செய்து இளமாறன், கோவிந்தராஜ் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
12-Sep-2025
03-Sep-2025
31-Aug-2025