மேலும் செய்திகள்
சிறுமி பலாத்காரம்; தொழிலாளி கைது
19-Sep-2024
பெரம்பலுார்:அரியலுார் மாவட்டம் உடையார்பாளையம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் அரவிந்தன்கோபு, 29, கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணமாகிவிட்டது. இவர், அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி, அந்த சிறுமியை அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பலாத்காரம் செய்தார்.தகவல் அறிந்த பெற்றோர், ஜெயங்கொண்டம் மகளிர் போலீசில் புகார் செய்தனர். அரவிந்தன்கோபு மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர்.
19-Sep-2024