மேலும் செய்திகள்
காலாவதியான மருந்துகளை கிணற்றில் வீசியது யார்?
04-Sep-2024
அச்சிறுபாக்கம்:கூடலுார் ஊராட்சியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இதில், சேவை மைய கட்டடம் அமைந்துள்ள பகுதியில், மக்களின் குடிநீர் தேவைக்காக, 30 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் கிணறு அமைக்கப்பட்டது.தற்போது, சில ஆண்டுகளாக குடிநீர் கிணறு பயன்பாடு இன்றி கைவிடப்பட்டது. இந்த திறந்தவெளி கிணற்றில், அப்பகுதிவாசிகள் தற்போது குப்பை கொட்டி வருகின்றனர்.இதனால், சுகாதார சீர்கேடு அடைவதுடன், தொற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக, புகார் எழுந்துள்ளது. எனவே, பயன்பாடின்றி உள்ள கிணற்றை மண் கொட்டி சமன்படுத்த, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூறியதாவது:மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நீர் ஏற்றப்பட்டு, தெருக்குழாய்கள் வாயிலாக குடிநீர் வினியோகம் நடக்கிறது. சில ஆண்டுகளாக, இந்த கிணற்று நீரை, யாரும் பயன்படுத்துவது இல்லை.திறந்த நிலையில் கிணறு உள்ளதால், இப்பகுதிவாசிகள் குப்பையை கொட்டி பாழாக்கி வருகின்றனர். தற்போது பெய்து வரும் மழை காரணமாக, கிணற்றில் தண்ணீர் தேங்கி, அப்பகுதி முழுதும் துர்நாற்றம் வீசுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
04-Sep-2024