போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
திருப்போரூர், திருப்போரூரில், 'எய்டு இந்தியா' தன்னார்வ அமைப்பு சார்பில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.பேரணியில் மாணவ -மாணவியர், தன்னார்வலர்கள் ஆகியோர்பங்கேற்று, போதை பொருள் ஒழிப்புவாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, ஓ.எம்.ஆர்., சாலையில் பேரணி சென்றனர். நிறைவில், போதை பொருட்கள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க பாடுபடுவோம் என, அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.