உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் செயல் அலுவலர் நியமிக்க எதிர்பார்ப்பு

அச்சிறுபாக்கம் செயல் அலுவலர் நியமிக்க எதிர்பார்ப்பு

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் பேரூராட்சி, 15 வார்டுகளை உள்ளடக்கியது. இந்த பேரூராட்சியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, செயல் அலுவலர் இன்றி செயல்பட்டு வருகிறது.தற்காலிகமாக, கருங்குழி பேரூராட்சியில் பணியாற்றும் செயல் அலுவலர் அருள்குமார், அச்சிறுபாக்கம் பேரூராட்சியில் பொறுப்பு செயல் அலுவலராக பணியாற்றி வருகிறார்.பணி நாட்களில் மூன்று நாட்கள், அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு வந்து செல்கிறார். இதனால், அடிப்படை தேவைகள் குறித்து மனு அளிக்க வரும் பொதுமக்கள் மற்றும் பேரூராட்சி பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன.எனவே, அச்சிறுபாக்கம் பேரூராட்சிக்கு, செயல் அலுவலர் நியமிக்க, துறை சார்ந்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை