உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பொத்தேரியில் ரயில் மோதி மகன் கண் முன் தாய் பலி

பொத்தேரியில் ரயில் மோதி மகன் கண் முன் தாய் பலி

மறைமலை நகர்:சென்னை தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஜீவரத்தினம் என்பவர் மனைவி லிடியா, 59.இவர், நேற்று முன்தினம் மாலை, தன் 13 வயது மகன் மற்றும் இரண்டு பெண் தோழியருடன், பொத்தேரியில் உள்ள உறவினர் வீட்டு புதுமனை புகுவிழாவில் பங்கேற்க, மின்சார ரயில் வாயிலாக பொத்தேரி வந்துள்ளார்.பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கியதும், லிடியா தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எழும்பூரில் இருந்து சென்ற விரைவு ரயில் மோதி, லிடியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்து வந்த தாம்பரம் ரயில்வே போலீசார், லிடியாவின் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை