உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரம்- - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்க கோரிக்கை

தாம்பரம்- - செம்பாக்கம் பேருந்து மானாமதி வரை நீட்டிக்க கோரிக்கை

திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செம்பாக்கம் கிராமத்திற்கு, தாம்பரத்தில் இருந்து, தடம் எண்: 55 என்ற அரசு பேருந்து இயக்கப்படுகிறது. இப்பேருந்து, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம், கொட்டமேடு உள்ளிட்ட பகுதிகள் வழியாக செம்பாக்கம் வருகிறது. இதில், 4 கி.மீ.,யில் உள்ள மானாமதி கிராமம் வரை, இந்த பேருந்தை நீட்டிக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து, செம்பாக்கம் பகுதிவாசிகள் கூறியதாவது: மானாமதியை சுற்றியுள்ள பகுதி மக்கள், செம்பாக்கம், கொட்டமேடு, நெல்லிக்குப்பம், கூடுவாஞ்சேரி பகுதிக்கு செல்ல வேண்டுமானால், 20 கி.மீ., சுற்றி செல்ல வேண்டும். இதனால், அன்றாட தேவைகளுக்கு செல்வோர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, தடம் எண்: 55 என்ற அரசு பேருந்தை, மானாமதி வரை நீட்டிப்பு செய்தால், 20,000த்திற்கும் மேற்பட்டோருக்கு பயனுள்ளதாக அமையும். மேலும் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோருக்கும், மானாமதியை சுற்றியுள்ள கிராம மக்களுக்கும், இது உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்