அரசு பேருந்து மோதி கோவில் பூசாரி பலி
சூணாம்பேடு:சூணாம்பேடு அடுத்த தேன்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாமோதரன், 62; தேன்பாக்கம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் பூசாரியாக வேலை செய்து வந்தார்.நேற்று காலை வழக்கம் போல கோவிலில் பூஜை செய்து விட்டு, வீடு திரும்பினார். கிழக்கு கடற்கரை சாலையோரம் நடந்து சென்றபோது, சென்னையில் இருந்து புதுச்சேரி சென்ற அரசு விரைவு பேருந்து தாமோதரன் மீது மோதியது.இதில், பலத்த காயமடைந்த தாமோதரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன்பின், பேருந்தில் பயணம் செய்த பயணியர் மாற்று பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சூணாம்பேடு போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்கு பதிந்த போலீசார், அரசு விரைவு பேருந்தை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.