வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தத்திங்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பா மாதிரி ரோடு போட ஆசை. அங்கே இருக்குற பாதுகாப்பை இங்கே குடுக்க துப்பில்லை. கதி சக்தி ஜிந்தாபாத்.
திரவக மடலில்
காரை ஓட்டி வந்தவர்கள் யார்
5 பெண்கள் மாடு மேய்த்துக் கொண்டு சாலையை கடக்க முயன்றனர்.அந்த வழியாக அதிவேகமாக வந்த கார், மோதியதில் அவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். நாட்டில் என்ன தான் நடக்குது??? 1 அப்போ மாடுகள் சாகவில்லையா 2 5 பெண்கள் ஒரே நேரத்தில் எப்படி சாக முடியும். இதன் உண்மை நிலவரம் இப்படி இருந்திருக்கும் அதாவது காரணம் - காரணம் பார் காரியம் புரியும் இந்த 5 பெண்களும் மாடுகள் அந்த பக்கம் போன பின் ஒருவர் கையை ஒருவர் கெட்டியாக பிடித்துக்கொண்டு கார் வருவதை பார்த்து வேகமாக ரோட்டை கடக்க முயற்சித்ததால் இந்த விபரீதம் நடந்திருக்கலாம். டிரைவர் குடித்து விட்டு வண்டியை ஓட்டியிருக்கலாம். ஆகவே இருபக்கத்திலும் தவறு இருந்திருந்தால் தான் இது நடந்திருக்க 100% வாய்ப்புகள்
அதெல்லாம் எல்லாருக்கும் தெரியும்.. அஜாக்கிரதை அலட்சியம்...மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இருவருமே பொறுப்பு
காரில் போக முடியாதவங்க வாழ தகுதி இல்லாதவங்கன்னு சிலர் நினைக்கிறாங்க.
என்ன பண்றது குடும்பத்தில் யாராவது இறந்தால் மட்டுமே ரொம்ப கவனமாக இருக்கின்றனர், அதுவரை கெத்து ன்னு நினைத்து வண்டி ஓட்டுகின்றனர்.
நமது மக்கள் சாலை விதிகள் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் அளவில் உள்ளனர். குறிப்பாக பெங்களூரு ஹைவே வழியாக செல்லும் போதும் இதே நிலைதான்.அனுமதிக்கப்பட்ட வேகத்தில் கார் ஓட்டுவது வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு மட்டுமே. அரசும் என்ன என்னவோ தடுப்பு முறைகளை செய்து வருகிறது. ஆனாலும் நோ use
சாலையில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு சரி, சாலையை கடக்க நினைப்போருக்கு சரி ஒருவருக்கும் சாலைவிதிகளை பற்றி அறவே தெரியாததுதான் இதுபோன்ற விபத்துகளுக்கு காரணமாக அமைந்துவிடுகின்றது. மக்களிடையே சாலைப்போக்குவரது விதிகள் பற்றிய விழிப்புணர்வை பெரிய அளவில் மக்கள் மத்தியிலே கொண்டு செல்லாமல் போனால் விபத்துகளால் அதிக அளவுக்கு தமிழகத்தில் மரண எண்ணிக்கை கணக்கில் அடங்காத அளவுக்கு போய்விடும். மிக சாதாரணமாக கூட சாலையை கடக்கும் விதிகளை பற்றிய அடிப்படை அறிவுகூட இல்லாமல் இருக்கும் நிலை பரிதாபகரமானது
இந்த நாட்டில், அதாவது இந்தியா முழுவதும், மக்களிடையே ஒருவித மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது அலட்சிய போக்கு, சுய கட்டுப்பாடின்மை, ஒழுங்கீனம், சமூக அக்கறையின்மை, அடாவடித்தனம், எந்த சட்டத்தையும் மதிக்காத போக்கு போன்று ஒட்டு மொத்தமாக இருக்கிறது நம் ஒவ்வொரிடமும் இருக்கிறது.
மேலும் செய்திகள்
லாரி மோதி சாலையோரம் துாங்கிய ஐவர் பலி
27-Nov-2024